Sunday, July 25, 2021

மேலான அறிவு

ஆசார்யன் ஆசீர்வாதம் பெற்ற நாம் பகவானின் திருவடிகளில்

புண்ணியங்களும் சரிந்து சிதைந்து விடுகின்றன. நம்மைவிட்டு அகன்று

சரணடைந்து விடுவதால், இரு வல்வினைகளும், பாபங்களும்

விடுகின்றன. புண்ணியங்களும் பாபங்களும் அதன் பலன்களை

அனுபவித்தே தீரவேண்டும். வேறோரிடம் தேடு என்ற ஸ்ரீ

நயினாச்சாரியாரின் வார்த்தைகளை கவனிக்க வேண்டும். இப்பாப

புண்ணியங்கள் அழிவதில்லை. புண்ணிய பலன் நம்மை

வேண்டியவர்களையும், பாப பலன் நம் விரோதிகளையும் அடையும்

என்று வேதம் சொல்கிறதும், இதனால் தான் யாருடைய

விரோதத்தையும் சம்பாதிக்க கூடாது என்று ஆசார்யர்கள் நமக்கு உபதேசம்

செய்கிறார்கள். பாபங்களும் நரக வேதனையும் வேண்டாம்.

புண்ணியங்களையும் சுவர்க்க அனுபவத்தையும் ஏன் வேண்டாம்

என்று சொல்ல வேண்டும். புண்ணியமும் சுவர்க்கமும் இன்பம்

பயப்பனவே இவைகளை ஏன் விட வேண்டும். ஏனென்றால் சுவர்க்கத்திலும்

நிரந்தரமாகத் தங்கமுடியாது. புண்ணிய பலன் முடிந்தவுடனே

சுவர்க்கத்திலிருந்து வெளியே தள்ளப்படுவோம். பிறகு பிறப்பு, இறப்பு

என்னும் சக்கரச் சுழலில் விழுந்து தவிப்போம். பிறவாப் பேறுதான் மோட்சம்

- வீடுபேறு பெறலாம். அங்கு எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனுக்கு

ஒழிவில் காலமெல்லாம் வழுவிலா அடிமை செய்து வாழலாம்.சரணடைந்த

நம்மை ஆசார்யன் பகவான் திருவடிகளில் சேர்க்கிறார். வினையேன்

வினைதீர மருந்து ஆகிறான் பகவான். உடனே சார்ந்த இரு

வல்வினைகளும் சரிந்து விடுகின்றன. ஆகவே ஆசாரியனின் திருவடிகளே

நமக்குப் புகலிடம். ஆளவந்தாருக்கு நாம் அடிமையாக வேண்டும். நாதமுனி

கழலே நாளும் தொழதெழுவோம், ஸ்ரீமன் நாதமுனிகளின் திருவடிகளில்

சரணடைவோம்.

திருவரங்கத்தமுதனார் என்னும் மஹான் ஸ்ரீ கூரத்தாழ்வானின்

சிஷ்யர். திருவரங்கத்தமுதனார் இயற்றியது இராமானுஜ நூற்றாந்ததி

ஆசார்யன் பெருமை பேசும் 108 பாசுரங்கள் ஒவ்வொரு பாசுரத்திலும்

இராமானுஜரின் திருநாமம் ஒலிக்கின்றது.108 முறை இராமானுஜரின்

திருநாம சங்கீர்த்தனம். ஆசார்யன் திருவடிபணிந்தால் மருள் சுரந்த

முன்னைப் பழவினை வேரறுத்துப் போகும் என்கிறார். அநாதிகாலமாக

நம்மை அறியாது நம் அஜ்ஞானத்தால் நம்மை வருத்தும் கர்ம வினைகள்

வேரோடு வாசனை கூட இல்லாமல் அறுந்து விழும் என்கிறார். இராமானுஜ

நாம சங்கீர்த்தனத்தின் உயர்ந்த பெருமை என்ன? இறந்தது வெங்கலி

கொடுமையான கலியின் துன்பங்களிலிருந்து விடுதலை. ஆசார்யனே

உறுதுணை, ஆசார்யனே என்தன் மாநிதி, ஆசார்யனே என் தன்

சேமவைப்பு, ஆசார்யனே எனக்காரமுது என்று உணர்ந்து வாழ்வோம்.

Monday, July 19, 2021

Sri Periyavachan Pillai's Pasurapadi Ramayanam ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பாசுரப்படி ராமாயணம்


ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பாசுரப்படி ராமாயணம்

Sri Periyavachan Pillai's Pasurapadi Ramayanam - Prabandha Ramayanam 




 “கற்பார்‌ இராமபிரானை அல்லால்‌ மற்றும்‌ கற்பரோ?” -ஸ்ரீ நம்மாழ்வார்‌. (Sri Nammazhwar)

“மனத்துக்கினியானைப்‌ பாடவும்‌ நீவாய்‌ திறவாய்‌” -ஆண்டாள்‌. (Sri Andal)

“நடையில்‌ நின்றுயர்‌ நாயகன்‌ ஸ்ரீ ராமபிரான்‌' - கம்பநாட்டாழ்வார்‌. (Kamban)

ஸ்ரீ ராமாயணம்‌ நாம்‌ படிக்க வேண்டிய நூல்‌. அதை விடுத்து வேறு நூல்களை கற்கலாமா? தேவையில்லை. நமக்கு வேண்டிய அனைத்தும்‌ ராமாயணத்தில்‌ உள்ளது என்கிறார் ‌ பெருமாளின்‌ கலியுக அவதாரமான ஸ்ரீ நம்மாழ்வார்‌. நமது மனத்திற்கு இனிமையைத்தருபவர்‌ ஸ்ரீராமபிரான்‌. எனவே ராமனைப்‌ பாடவேண்டும்‌ என்று அருளியவர்‌ பூமாதேவியின்‌ அம்சமான ஆண்டாள்‌ நாச்சியார்‌. எல்லா விதமான நல்ல குணங்களைக்‌ கொண்டவன்‌ ஸ்ரீ ராமபிரான்‌. மனிதன்‌ இப்படித்தான்‌ வாழவேண்டும்‌ என வாழ்ந்து காட்டிய அவதாரம்‌ என் கிறார்‌ கவிச்சக்கரவர்த்தி கம்ப நாட்டாழ்வார்‌.

மஹாவிஷ்ணுவின்‌ மிகச்சிறந்த அவதாரமான ஸ்ரீராம அவதாரத்தை ஆழ்வார்களும்‌, ஆச்சார்யர்களும்‌, முனிவர்களும்‌, புலவர்களும்‌ மற்றும்‌ எல்லா அறிஞர்களும்‌ போற்றியுள்ளனர்‌. வால்மீகி முனிவர்‌ வடமொழியில்‌ பாடியருளிய ஸ்ரீராமாயணத்தை பலரும்‌ பலமொழிகளில்‌ பாடியுள்ளனர்‌, பாசுரப்படி ராமாயணம்‌ எனும்‌ இந்நூல்‌ ஆழ்வார்கள்‌ எம்‌பெருமான்‌ ஸ்ரீமந் நாராயணனைப்‌ பாடிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்‌ ராமாயணம்‌ சம்பந்தப்பட்ட பாசுர வரிகளால்‌ தொகுக்கப்பட்டது, தமிழ்‌ மந்திரச்‌ சொற்களாலான இந்த ராமாயணத்தை தொகுத்து அருளியவர்‌ பெரியவாச்சான்‌பிள்ளை எனும்‌ ஆசார்ய மஹா புருஷர்‌ ஆவார்‌. தமிழகத்தில்‌ கும்பகோணம்‌ அருகே சேங்கனூரில்‌ ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின்‌ மறு அவதாரமாகத்‌ தோன்றியவர்‌. துன்பம்‌ தரும்‌ அரக்கர்களிடமிருந்து (கொரோனா) மனிதர்களை காப்பதற்கு பெருமாள்‌ எடுத்த, ராமாவதாரத்தைச்‌ சொல்லும்‌ பாசுரப்படி ராமாயணத்திற்கு இணையான நூல்‌ எதுவுமில்லை. இந்நூலைப்‌ பாராயணம்‌ செய்வதால்‌ ராமாயணம்‌ எனும்‌ வேதத்தையும்‌ திவ்யப்ரபந்தமும்‌ சேர்த்து சேவித்த இரட்டிப்பு பலன்‌ உண்டு. மேலும்‌ ஸ்ரீராமபிரான்‌. சீதாதேவி, லட்சுமண, பரத, சத்ருக்கன, ஆஞ்சநேய ஸ்வாமி, ஆழ்வார்கள்‌, தேவர்கள்‌, முனிவர்கள்‌, ஆச்சார்யர்கள்‌, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா ஆகியோரின்‌ திருவருளும்‌, ஆசிகளும்‌ பெற்று மகிழ்வடைவர். மஹாபாரத யுத்தம்‌ முடிந்த பிறகு நாட்டில்‌ ஏற்பட்ட அலங்கோலங்கள்‌ நீங்கி மக்கள்‌ நலமாக வாழ என்ன செய்ய வேண்டும்‌? என பீஷ்மாச்சாரியாரிடம்‌ தருமன்‌ கேட்கிறார்‌. அதற்கு பீஷ்மர்‌ நாடு முழுவதும்‌ பல இடங்களில்‌ ஸ்ரீராமாயண கதைகளைச்‌ சொல்ல ஏற்பாடு செய்யவேண்டும்‌ என்கிறார்‌.  எனவே பக்தர்கள்‌ பாராயணம்‌ செய்ய நாம்‌ - 78 எவளியீடாக வழங்குகிறோம்‌. “கொரோனா” காலத்திலும்‌ எல்லோரும்‌ சேவித்து நாடும்‌, நாமும்‌ நலம்‌ பெற உதவ வேண்டுகிறோம்‌. ராமர்‌ படம்‌ அல்லது பெருமாள்‌ படத்தை துளசி, புஷ்பத்தினால்‌ அலங்கரித்து திருவிளக்கேற்றி வைக்க வேண்டும்‌. அதற்கு கீழே மனைப்‌ பலகையில்‌ கோலமிட்டு சிறிய தட்டில்‌ வெற்றிலைப்‌ பாக்கு, பழம்‌ வைக்க வேண்டும்‌.




இராமாயணம்‌ பாராயணம்‌ செய்யும்‌ இடங்களில்‌ சிரஞ்சீவியான, ஸ்ரீ ஆஞ்சநேயஸ்வாமி வந்து கேட்டு அருள்‌ புரிவதாக ஐதீகம்‌. எனவே அவருக்குரிய  மரியாதை அளிக்க வேண்டும்‌. முதல்முறை பாராயணம்‌ செய்யும்‌ போது வைணவப்‌ பெரியவர்‌ ஒருவரை அழைத்து அவரை குருவாகக்‌ கொண்டு பாராயணம்‌ செய்யத்‌ தொடங்க வேண்டும்‌.

பாராயணம்‌ முடிந்த பின்‌ நமது வசதிக்கேற்ப பிரசாதம்‌ அல்லது பழங்கள்‌, பால்,‌ நெய்வேத்யம்‌ செய்து வணங்க வேண்டும்‌. குருவை வணங்கி ஆசி பெற வேண்டும்‌. இப்படிப் பல விதங்களில்‌ எல்லோரும்‌ எல்லா சமயத்தைச்சார்ந்தவர்களும்‌ போற்றிய ஸ்ரீராமபிரான்‌ பெருமைகள்‌ கூறும் இந்த மந்திரத்தை நாம்‌ தினசரி நமது வீட்டு பூஜையறையில்‌ சேவித்துப்‌ பயன்‌ பெறுவோமாக.


பாசுரப்படி ராமாயணம் தினசரி சேவிப்பதால்‌ கிடைக்கும்‌ பலன்கள்:‌

Benefits of  Reciting Pasurapadi Ramayanam :

வால்மீகி முனிவர்‌, கம்பர்‌, துளசிதாசர்‌, போன்றோர்‌ அளித்துள்ள இராமாயணத்தை விட இதற்கு ஒரு தனிச்சிறப்பிற்கு காரணம்‌,  முனிவர்‌, தேவர்கள்‌ இவர்களைப்‌ போன்றவர்களை காட்டிலும்‌ எம்பெருமானை அனுபவிப்பதில்‌ முதலாக விளங்குகிறார்கள்.‌

ஆழ்வார்கள்‌. மற்றைய ஆசிரியர்கள்‌ உருவாக்கிய இராமாயணத்தில் அவரவர்‌ தனிப்பட்ட அனுபவமே அமைந்திருக்கும்‌. இதுவோ பன்னிரு ஆழ்வார்களின்‌ அனுபவங்கள்‌  நிறைந்தது.

* கடவுளை நாம்‌ அடைவதற்கு வழி காட்டுவது வேதங்கள்‌

* ராம - ரிக்‌ வேதம்‌, மா - சாம வேதம்‌, ய - யஜுர்வேதம்‌, ணம்‌ -

அதர்வணம்‌. இவ்வாறு 4 வேதங்களில்‌ பொருள்யாவும்‌ ராமாயணத்‌தில்‌ அடங்கியுள்ளது.

* மிகப்புனிதமான சகல பாவங்களையும்‌ போக்க வல்ல ராமாயணம்‌, மனிதர்க்கு சர்வ காரிய சித்திகளும்‌ அளிப்பதோடு நவக்கிரக தோஷங்கள் விலகிவிடும்‌ என ஸ்கந்தபுராணம்‌ கூறுகிறது, பிரபல ஜோதிடர்களும் இக்கருத்தை (குமுதம்‌ ஜோதிடம்‌, தினமணி  வெள்ளிமணி) யே கூறி வருகிறார்கள்‌.

* ஸ்ரீராமரின்‌ புத்திரர்கள்‌ லவன்‌, குஜன்‌ ராமாயணத்தை பாடி அரங்கேற்றம்‌ செய்யும்‌ போது அரியணையில்‌ வீற்றிருந்த ராமர்‌ கீழே இறங்கி மக்களோடு அமர்ந்து இதை கேட்டாராம்.

* கைலாயத்தில்‌ பூததணங்களின்‌ தலைமைப்‌ பதவிக்கு போட்டி ஏற்பட்டது. அப்போது சிவபெருமான்‌ மூவுலகை முதலில்‌ சுற்றி வருபவர்க்கே அப்பதவி என்றாராம்‌.  விநாயகர்‌ “ராம என்று தரையில்‌ எழுதி தூப, தீபம்‌ காட்டி மும்முறை வலம்‌ வந்து வணங்கி கணங்களின்‌ பதியான தலைமைப்‌ பதவியை பெற்றாராம்‌. ‌

* இவ்வாறு ராமரைவிட, ராமாயணமும்‌ அதை விட ராம நாமமும் சிறப்பு மிக்கதாக விளங்குகிறது.

* பயன்‌ எதிர்பார்த்தோ, எதிர்பாராமலோ ஸ்ரீராம அவதாரத்தை கூறும்‌ - பாசுரப்படி இராமாயணத்தை நீங்கள்‌ மனனம்‌ செய்து வந்தால்‌ கிடைக்க வேண்டியவை ஏற்ற காலத்தில்‌ கிடைக்கப்பெறும்‌. இது உறுதி.

-  ஸ்ரீ ராமஜெயம் -

Monday, July 5, 2021

அறுபதுக்கறுபது ஆலயதரிசன கோகுலாச்சாரி

 அறுபதுக்கறுபது ஆலயதரிசன கோகுலாச்சாரி

- ஆசுகவி ஆராவமுதன்‌, கள்ளக்குறிச்சி.


எவரெஸ்ட்தான்‌ புவனத்தில்‌ மிக உயர்ந்த

இமயமெனச்‌ சொல்வார்கள்‌ புவனம்‌ தன்னில்‌

அவதாரம்‌ புவனகிரி மலைகள்‌ உச்சி

அருள்ராக வேந்திரர்‌ சீர்‌ ஏகாங்கி

அவதாரத்‌ தலம்‌ ஈடின்‌ எழில்‌ உரைத்த

ஆம்முதல்வன்‌ புருஷோத்தம நாயுடுத்தந்‌

தவவூராம்‌ கோகுலாச்‌ சாரியார்‌ வாழ்கின்ற

தமிழ்‌ ஆலய தரிசனஊர்‌ நீடு வாழ்க


தென்னைமரம்‌ குளநீரில்‌ முகத்தைப்‌ பார்க்கும்‌

திகழண்ணா மலைபல்கலை கழகத்தில்சீர்‌ வேலை!

தன்துறையோ பொறியியல்தான்‌ என்ற போதும்‌

தமிழறிஞர்‌ பாரதிநாதனெனப்‌ பேரார்‌

ஒன்றல்ல பலதுறையில்‌ ஞானம்‌ ! சற்றும்‌

ஓயாமல்‌ வைணவத்துற்‌ குழைப்பதற்கே

பொன்பிறவி தந்துள்ளான்‌ சித்ரகூடன்‌!

புகழ்மங்கை மன்னனது கவிதை பெற்றேன்‌!


பத்திரிக்கை நடத்துதற்கு சோரா உண்மை

பாங்குமனம்‌ அலைஓசை கல்கி யைப்போல்‌

சித்தரிக்கத்‌ தெரியவேண்டும்‌ ! தினமணி தன்‌

சிங்கார கலாரசிகன்‌ வசியம்‌ வேண்டும்‌

அத்தனையும்‌ கைரேகை யாகப்‌ பெற்றார்‌

ஆலயதரிசனம்‌ தன்னால்‌ வெற்றி பெற்றார்‌

உத்தமிக்கு அருகிருந்து பேசுதவல்‌ போல்‌

சாமர்த்யம்‌ கோகுலாச்சா ரியர்‌ எழுத்து


உன்னால்மு டியும்‌என்ற எழுத்து வீரர்‌

ஓங்குபுகழ்‌ சுகிசிவத்தின்‌ பேச்சைச்‌ சுட்டி

உண்மையுளோர்‌ மெச்சுவகை குற்றம்‌ சொல்ல

உள்ளாரோ? நக்கீரர்‌ இவரைப்‌ போல

தன்மதத்தை போற்றிடுவார்‌ அன்று, மற்ற

தவ மதங்கள்‌ குறை சொல்லா ஆழ்வார்‌ போன்றார்‌!

தன்புகழைப்‌ போற்றாதார்‌ தராசு முள்போல்‌

தகைவாதம்‌ செய்வதிலே மாறார்‌ நீதி!


ஆழிமழைக்‌ கண்ணாபா சுரத்தில்‌,மற்றும்‌

அவ்வெழிளுடை அன்னைமீர்‌ பாசு ரத்தில்‌

வாழிதமிழ்‌ ழகரங்கள்‌ பத்து காட்டி

வடித்த எழில்‌ ஆண்டாளை குறை சொல்சொன்ன

பாழியினை , கலியுகத்து நரசிம்மன்‌ போல்‌

பழிவர்க்க யாருண்டு கோகுலாச்‌ சாரி

ஆழிக்கு இடகற்கள்‌ தப்பல்‌ உண்டோ?

அணைதிறந்தால்‌ மணலின்புல்‌ என்னவாகும்‌!


அரசியலார்‌ வெற்றிபெறல்‌ இல வசத்தால்‌

அவர்கள்போல்‌ வசியம்செய்‌ வழியும்‌ கண்டார்‌

அரும்‌ ஆழ்வார்‌ சரித்திரங்கள்‌ பாவை பாடல்‌

அயராமல்‌ கோஷ்டிக்கு கொடுப்பார்‌,மற்றும்‌

வரும்‌ மழை போல்‌ அழைக்குமிடம்‌ வந்து பெய்வார்‌

வரும்‌ சொற்கள்‌ முரசறையும்‌ , மகுடி ஆகும்‌

தரும்செய்தி அரித்தனால்‌,மூடி இல்லா

தமிழ்க்காது , வயல்நிறைக்கும்‌ பக்தி வெள்ளம்‌


வங்கத்தின்‌ கூம்பதுவோ சித்ரகூட

வள்ளல்பெரும்‌ பசுவான ஏவியார்‌ தான்‌

தங்குமிடம்‌ அதுபோதும்‌ ! காமதேனு

தரும்‌ எல்லாம்‌ என அறிந்த கோகு லாச்சார்‌

தங்கிவிட்டார்‌ கைங்கர்ய இடம்‌ தேர்ந்‌ திட்டார்‌!

தானாக நெய்வேலி கரிசெல்‌ போல

பொங்குபுகழ்‌ வைகுந்த முன்‌ பதீவை

பொறுத்திட்டார்‌! கைங்கர்ய நெடுநாள்‌ வாழ்வார்‌ !


சுரிகுழலிங்‌ சனப்புனல்‌ சூத்திரத்தைச்‌ சற்றும்‌

சோராமல்‌ சொலுமெங்கள்‌ தோப்புச்‌ சாமி

சரியாக “அவன்‌ பொருளை அவனே காப்பான்‌”

சாதிப்பார்‌ அதற்கேற்ப கோகுலாச்‌ சாரி

சரிவாழ்க்கை இசைமக்கள்‌ செல்வ மெல்லாம்‌

சாதித்தே இயக்குகிரான்‌ அறுப தென்னும்‌

பரியோட்டம்‌ நூறதையும்‌ கடக்கும்‌, கோடி

பாகவதர்‌ வரம்பெற்றார்‌ குடும்பம்‌ ஓங்கும்‌


அன்றாட வைணவனின்‌ வாழ்க்கைப்‌ பாங்கு

அவனில்ல நிகழ்ச்சிகளின்‌ இலக்கணங்கள்‌

கண்களிக்கும்‌ திருமணத்தின்‌ ஐதீகங்கள்‌

கருத்தேற்கும்‌ விளக்கங்கள்‌ சொல்வார்‌ இன்னும்‌ !

எண்ணத்தில்‌ கேள்வி பதில்‌ விளக்கம்‌ தந்தே

இருட்டுலகில்‌ கைவிளக்காய்‌ வழிகள்‌ காட்டும்‌

பொன்மனத்தார்‌ கோகுலாச்சாரியார்‌ தம்மை

புகழ்ச்‌ சொல்‌ தேடுகிறேன்‌ கல்லைக்‌ கம்பன்‌.

 

சடகோப கல்யாண ராமன்‌ தங்கள்‌

சாதனையாம்‌ கலியனொலி மாலை தன்னில்‌

அடலேறாய்‌ இயக்குனராய்‌ பரிமளிப்பார்‌ !

அடக்கத்தில்‌ உடையவர்க்கோர்‌ ஆழ்வான்‌ போன்றார்‌!

விடத்தக்க ஐஸ்வர்ய கியாதி மோகம்‌

விட்டுவிட்ட வெள்ளாடைத்‌ துறவி

நடந்துகாட்டி நடக்கச்செய்‌ அஸ்ம தாசான்‌

நல்வாழ்க்கை பெருவெற்றி நீடு வாழ்க !


அத்வைத அழகு நன்னூல்‌ ,முதுகுன்றத்தில்‌

அரங்கேற்றம்‌ மகாராஜா துறவு ! விசிஸ்ட

அத்வைதம்‌ அவ்வூரில்‌ ஓராண்‌ டிண்மேல்‌

அழகுதிரு வாய்மொழியின்‌ விளக்கம்‌ சொன்ன

சித்தரிவர்‌ ரங்கமன்னார்‌ சபை யளித்த

சிங்கார பாலபோகம்‌ ததியன்‌ னத்தை

சித்தத்தில்‌ நாநுனியில்‌ வைத்து இந்த

சிங்கார பேச்சால்‌ வாழ்த்து கின்றேன்‌.


கண்டியூரின்‌ கலியனைப்போல்‌ , ததியர்‌ சேவை

தவசெய்ய னூர்சினுவாஸ சுவாமி யைப்போல்‌

தென்மதுரை ரங்கநாதன்‌ , தமிழ்நன்‌ நாட்டில்‌

திருவோங்கு வைணவத்தை வளர்ப்பேர்‌ போல

அன்புமிகு கோகுலாச்சா ரியார்‌ நீரே

அருந்ததொண்டு புரிந்திடுக ! பாதி தூக்கக்‌

கண்ணகழன்‌ தாள்பற்றி வணங்கு கின்றேம்‌

கவியமுதன்‌ வாழ்த்துகிறேன்‌ வாழ்க! வாழ்க !