சித்திரையில் அச்வனியில் சிறப்புடன் பிறந்தான் வாழியே
மிதுன சாலக்கிராம நகரத்தை வாழ்வித்தான் வாழியே
அத்திகிரி அடி பணிந்தவனிடம் காதலுற்றான் வாழியே
ஆசாரியன் அன்றி வேறு தெய்வம் அறியாதவன் வாழியே
முக்தி அடைய ஆசார்யன் பாதமே கதி என்றான் வாழியே
பால் பொங்கிடும் என்று அரங்கனையே வெறுத்தான் வாழியே
எதிராசர் மிகு அருள் பெற்று உணர்ந்தோன் வாழியே
வடுக நம்பி திருவடிகள் ஊழிதோறூழி வாழியே
